சொகுசு பங்களாவை பொலித்தீன்களால் மூடிய ஷாருக்கான்

202005110920070950 Tamil News In the lockdown Shah Rukh gave special task to the fans SECVPF
202005110920070950 Tamil News In the lockdown Shah Rukh gave special task to the fans SECVPF

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மும்பையில் உள்ள தனது சொகுசு பங்களாவை மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களால் மூடியுள்ளார்.

இவ்வாறு தனது பங்களாவை பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் ஷாருக்கான் கொரோனாவுக்காக இந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் பெய்யும் அதிகமான மழையிலிருந்தும், பலத்த காற்றிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளவே வீட்டின் வெளிப்புறத்தை பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களால் மூடியிருப்பதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மழைக் காலங்களில் ஷாருக்கான் இப்படிச் செய்வதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஷாருக்கான் தரப்பிலிருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.