நோபல் பரிசு விழா இரத்து

nobal prize
nobal prize

இந்த வருடத்திற்கான நோபல் பரிசு விழா இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளதாக நோபல் பரிசு நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 10ம் திகதி நோபல் பரிசு விழா இடம்பெறும்.

கடந்த 1956 ஆம் ஆண்டு உலக போர் காரணமாக நோபல் பரிசு விழா இரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விழா மீண்டும் இரத்து செய்யப்படுவதாக நோபல் பரிசு நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.