அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆழிப்பேரைலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன.
லாஸ்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், தெற்கு நகரமான சிக்னிக்கில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து இன்று குறித்த பகுதியின் நிலைமை வழமைக்கு திரும்பி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே இங்கு விடுக்கப்பட்ட ஆழிப்பேரைலை எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.