சீனாவின் சில பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள சிலுவைகளை அகற்ற உத்தரவிட்ட சீன அதிகாரிகள்

89
89

சீனாவின் சில பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள சிலுவைகளை அகற்றவும், வீட்டில் உள்ள இயேசுவின் படங்களை நீக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.

இந்த நிலையில், சில இடங்களில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் உள்ள இயேசுவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் படங்களை வைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் அன்ஹூய் ஜியான்ங்சு, ஹேபேய் மற்றும் ஸீஜியாங் ஆகிய மாகாணங்களில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மேலும் சீனாவின் மற்றொரு மாகாணமான ஷாங்ஹியில், இயேசுவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.