இலங்கை உணவுகளாகிய சோறு, கறி, அப்பம் மற்றும் கொத்து உள்ளிட்ட இலங்கை உணவை வழங்கும் ‘மண்டாஸ்’ என்ற உணவகம் அவுஸ்திரியாவின் செயின்ட் பால்டனின் நகர மையத்தில் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் உள்ள இலங்கைக்கான தூதர் மஜிந்த ஜெயசிங்க சிட்டி ஹாலில் செயின்ட் போல்டனின் மேயரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.குறித்த நிகழ்வின் ஒரு பக்கமாக உணவக திறப்பும் நடந்துள்ளது.
வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்த இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்த தூதரும் மேயரும் தங்கள் ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தியதாக தூதரகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த உணவகம் அவுஸ்திரிய மேயருக்கும் அவரது தூதுக்குழுவிற்கும் ஒரு உண்மையான இலங்கை உணவுகளை சுவைக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
இது இலங்கை உணவு வகைகளை மற்ற முக்கிய உணவு வகைகளுடன் பரிமாறும் இடமாகும்.