கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் விமானி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-344 விமானம் வந்துள்ளது.
விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உட்பட மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர்.
விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்கியுள்ளது.
ஆனால் ஓடுதளத்தையும் தாண்டி விமானம் நிற்காமல் சென்றது. இதனால் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளது.
இதில் விமானம் இரண்டாக பிளந்து விமானத்தின் முன்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
முதற்கட்ட தகவலில் விமானி ஒருவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு வீரர்கள், பொலிசார்கள் ஈடுபட்டுள்ளனர்.