பெருவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தைக் கடந்தது!

4807b36cb2724b07960b4f9c2cde7a5d 720x450 1

பெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, ஆறு இலட்சத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெருவில் ஆறு இலட்சத்து 438பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆறாவது நாடாக விளங்கும் பெருவில், 27 ஆயிரத்து 813பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 112பேர் பாதிக்கப்பட்டதோடு, 150பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 324பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 525பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

மேலும், நான்கு இலட்சத்து ஏழாயிரத்து 301பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.