படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலி!

mysteriousdeathofapracticingfemaledoctorinchennai 1 1
mysteriousdeathofapracticingfemaledoctorinchennai 1 1

அகதிகளை ஏற்றிச் சென்ற மற்றுமொரு படகு கவிழ்ந்ததில் 22 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லிபியாவின் ஜாவ்ரா கடல் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

அகதிகள் சிலர் சிறிய படகில் பயணம் செய்துள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இதை கண்டதும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் 22 பேரை சடலமாகத்தான் மீட்க முடிந்தது.

இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என தெரிகிறது. லிபிய கடலோர காவல் படையினர் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமையும் இதே ஜாவ்ரா கடல் பகுதியில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 45 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது