இங்கிலாந்தில் பிணங்களுடன் நுழைந்த கனரக வாகனம்

landon
landon

லண்டன் நகரின் ரோந்துப் பணியில் இருந்த பொலிசார் பல்கேரியா நாட்டு கனரக வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டதில் 39 பிணங்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாகனத்தின் சாரதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான சாரதி வடக்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்த வாகனத்தில் இறந்து கிடந்தவர்கள் யார்? அவர்கள் அனைவரும் அடைக்கலம் தேடி லண்டனுக்குள் நுழைய முயன்றவர்களா? அல்லது வேறு இடத்தில் கொல்லப்பட்ட பிணங்களா? என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.