துருக்கியின் கொன்யா நகரிலுள்ள மெயில் ஒப்ருக் என்ற ஏரி, இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த நீர்மட்டம் , அதிக வெப்பநிலை மற்றும் பற்றீரியாக்களின் பெருக்கம் காரணமாகவே ஒரு கிலோமீற்றர் விட்டமும் 40 மீற்றர் ஆழமும் கொண்ட குறித்த ஏரி இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அடர் நீல நிறத்தில் இருக்கும் ஏரியின் வண்ண மாற்றத்துக்கு பாக்டீரியாக்களின் மிகப்பெரிய கட்டமைப்பே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.