கவச வாகனத்துடன் மோதியது கார்; 4 பொது மக்கள் பலி!

1 15
1 15

அமெரிக்க இராணுவத்தின் கவச வாகனத்துடன் கார் மோதிய விபத்தில், பொதுமக்கள் நால்வர் பலியாகினர்.

தென்கொரியாவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அமெரிக்க இராணுவ சிப்பாய் ஒருவரும் காயமடைந்தார் என்று ‘தி கொரியா ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

தலைநகர் சியோலுக்கு வடக்கே உள்ள போச்சியோனில் ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க இராணுவத்தினரின் கவச வாகனம் இராணுவ தளத்திற்கு சென்று கொண்டிருந்தது. அச்சமயமே கார் கவச வாகனத்தின் பின் புறத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். எனினும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர்.

இவ்விபத்தில் அமெரிக்க இராணுவ சிப்பாய் ஒருவரும் காயமடைந்தார்.

வட கொரியாவின் தாக்குதலைத் தடுக்க சுமார் 28,000 அமெரிக்க இராணுவத்தினர் தென் கொரியாவில் நிலைகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.