மத்திய ரயில்வே இணையமைச்சர் உயிரிழப்பு !

1600916704732
1600916704732

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்த இந்திய மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி நேற்று புதன்கிழமை காலமானார்.

இவருக்கு கடந்த 11ம்திகதி கொரோனா தொற்று உறுதியான நிலையில் கடந்த சில தினங்களாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் புதன்கிழமை (செப்.23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுரேஷ் அங்கடி கர்நாடகாவின் பெலாகவி தொகுதி எம்.பி., யாக தேர்வானார். இவர் நான்கு முறை லோக்சாபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.