கர்நாடகத்தில் விவசாயிகள் இன்று (28) மத்திய-மாநில அரசுகளின் 5 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுத்துள்ள முழு அடைப்புப் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்தப்படுகின்றன.
அதற்கமைய கர்நாடகத்தில் விவசாயிகள் முன்னெடுத்துள்ள முழு அடைப்புப் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கலபுரகி உள்ளிட்ட நகரங்களில் குறைந்த அளவில் மக்கள் நடமாட்டம் காணப்படுவதுடன், பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்ட போதும் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.