பிரித்தானியாவில் கடற்கரை கிராமங்களில் கடல்நீர் திடீரென செம்மஞ்சள் நிறமாக மாறியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
கடந்த வாரம் இந்தக் கடற்கரை பகுதிகளில் கடல்நீர் திடீரென செம்மஞ்சள் நிறமாக மாறியது. இது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன. எனினும் ஏன் கடற்கரை செம்மஞ்சள் நிறமானது என்று கண்டறியப்படவில்லை.