இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் narendramodi_in என்ற தனிப்பட்ட டிவிட்டர் கணக்கே முடக்கப்பட்டுள்ளது.
பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை டிவிட்டர் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமரின் தேசிய நிவாரண நிதி திட்டத்துக்கு பிட்காயின் மூலம் பணம் செலுத்தும் படி குறிப்பிட்டு முடக்கியுள்ளது தெரியவந்தது.
பிரதமரின் தனிப்பட்ட கணக்கை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக டிவிட்டர் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.