5 பயண பெட்டியுடன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பிரித்தானிய பெண்!

ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து 5 பயண பெட்டியுடன் டுபாய் செல்ல முயன்ற இளம்பெண் ஒருவர் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பிரித்தானியரான தாரா ஹான்லான் (30) என்ற இளம்பெண்ணிடமிருந்த பயண பெட்டிகளை சோதனையிட்ட பொலிசார், அவற்றிற்குள் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் 2 மில்லியன் பவுண்டுகள் எனவும்; இந்த ஆண்டில் சிக்கிய சட்ட விரோத பணத்தில் பெருந்தொகை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

நவம்பர் மாதம் 5 திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும்வரை, அவர் காவலில் அடைக்கப்படுவார் என குறிப்பிடப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த பெண் 14 ஆண்டுகள் வரை சிறையில் செலவிட வேண்டியிருக்கும் என குறிப்பிடப்படுகிறது.