தஜிகிஸ்தான் நாட்டின் அரச தலைவராக எமோமலி ரஹ்மோன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தஜிகிஸ்தானின் ஜனாதிபதித் தேர்தல் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த நிலையில், 85 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன.
இதன் அடிப்படையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இதுவரையான நிலவரப்படி, பதிவான மொத்த வாக்குகளில் 90 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு தஜிகிஸ்தானின் அரசதலைவராக எமோமலி ரஹ்மோன் பதவி வகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.