ஏதிலிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து 11 பலி!

Eleven Dead After Boat Carrying Refugees Sinks Off Tunisia 700x450 1
Eleven Dead After Boat Carrying Refugees Sinks Off Tunisia 700x450 1

தெற்கு துனிசியாவிலிருந்து ஏதிலிகளை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதில் எட்டுப் பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் என 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த படகில் 27 பேர் பயணம் செய்துள்ள நிலையில் இதுவரை ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஏதிலிகள் ஆப்பிரிக்க நாட்டவர்கள் என்பதுடன் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸின் கடற்கரையில் அவர்கள் பயணித்த படகு மூழ்கியுள்ளது.

துனிசியா மற்றும் லிபியா போன்ற வட ஆபிரிக்காவில் உள்ள நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் அதிகளவில் வேறு நாடுகளுக்கு பயணிக்கின்றனர். அவர்களில் பலர் போர்கள் மற்றும் பட்டினியிலிருந்து மீண்டெழ மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்கு செல்ல விரும்புகிறார்கள்.

இந்நிலையில், இவ்வாறு அபாயமன கடற்பயணக்கை மேற்கொண்டு வருவோரில் இவ்வாண்டு மத்தியதரைக் கடலில் 620இற்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.