பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு பாரிஸின் நகரின் மையத்திலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள கான்ஃப்லான்ஸ்-செயிண்ட்-ஹானோரைனில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த நபர் பள்ளி ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதையடுத்து அவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு சுட்டுக்கொள்ளப்பட்ட போது குறித்த பயங்கரவாதி இறக்கும் தருவாயில் “அல்லாஹு அக்பர்” என கத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த நபர் வெடிக்கும் ஆடையை அணிந்திருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.