தாய்லாந்து நாட்டில், மலேசியா எல்லைப் பகுதிகளில் உள்ள இரு சோதனைச் சாவடிகளில் கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 15 தன்னார்வல பாதுகாவலர்கள் உயிரிழந்தனர்.
சோதனைச் சாவடியில் எதிர்பாராத விதமாக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் 12 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து சோதனை சாவடி இருந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.