முக புத்தக இன்ஸ்டாகிராம்செயலி குறித்து, அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக வலைத்தள செயலியான இன்ஸ்டாகிராம்மூலம் சிறுவர்கள் குறித்த தரவுகள் கையாளப்படும் விதம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான தரவுக் கட்டுப்பாட்டு நிறுவனமாக அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணைக்குழு காணப்படுகிறது.
இந்த நிலையில், பாவனையாளர்களின் தரவுகளைக் கையாள்வதற்காக Instagram செயலி கொண்டுள்ள சட்டரீதியான உரித்து தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
18 வயதுக்குட்பட்டஇன்ஸ்டாகிராம் பாவனையாளர்களின் தரவுகளை பகிரங்கப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.