எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த தெலங்கானா முதல்வர்!

ttbn fl
ttbn fl

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளித்த முதல்வர் பழனிசாமிக்கு அந்த மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.