மத்திய வியட்நாமில் அண்மைக்காலமாகப் பெய்து வரும் கடும்மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக மலைப்பகுதியிலுள்ள டிரா வான் மற்றும் டிராங் லெங் ஆகிய கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி ஏராளமான வீடுகள் புதைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந் நிலையில் இடிபாடுகளிலிருந்து இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 40க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படகின்றது.