துருக்கி ஜனாதிபதியுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றும் இருவருக்கு கொரோனா!

covid 19 swab test positive
covid 19 swab test positive

துருக்கி ஜனாதிபதியுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றும் துருக்கியின் இரு உயர் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

துருக்கி ஜனாதிபதி ரசிப் தைய்யிப் எர்டோகனின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கலின், தனக்கு இலகுவான கொரோனா அறிகுறிகள் உள்ளதாகவும் தற்போது சிகிச்‍சை பெற்று வருவதாகவும் கடந்த சனிக்கிழமை கூறினார்.

இதேவேளை துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லுவும், அவரது மனைவி மற்றும் மகள் அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துருக்கியில் மொத்தம் 375,367 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 10,252 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.