உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனரோடு கொரோனா பாதித்த நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளாதால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் அதானம் கெப்ரியேசஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட நபர் என்னை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. நான் நலமுடனேயே உள்ளேன். அறிகுறிகள் எதுவும் இல்லை.
எனினும், எதிர்வருகிற நாட்களில் உலக சுகாதார அமைப்பு வரைமுறைகளின்படி, என்னை தனிமைப்படுத்தி கொள்வேன். வீட்டில் இருந்தபடியே பணி செய்வேன். நாம் அனைவரும் சுகாதார வழிகாட்டுதலின்படி செயற்பட வேண்டும் என்பது மிக முக்கியம்.
இதன் வழியே கொரோனா பரவலின் தொடர்சங்கிலியை நாம் உடைக்க முடியும். வைரசை ஒழிக்க முடியும். சுகாதார விடயங்களை பாதுகாக்க முடியும். கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கவும் மற்றும் கடுமையான பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கும் வேண்டிய பணிகளை நானும் என்னுடன் பணிபுரிபவர்களும் தொடர்ந்து மேற்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.