காபூல் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு:19 பேர்பலி!

Suicide bomber strikes at university in Kabul crime
Suicide bomber strikes at university in Kabul crime

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 22 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் புத்தகக் கண்காட்சியொன்றின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற இருந்த நிலையிலே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை தலிபான் படைகள் மறுத்துள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும், கடந்த சில வருடங்களாக ஆப்கானிஸ்தானில் உள்ள கல்வி ஸ்தாபனங்களை குறிவைத்து தாக்குதல் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.