இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 76 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 76 இலட்சத்து 54 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.
இது அமெரிக்காவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். அத்துடன் 5 இலட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை நேற்று ஒரேநாளில் 46 ஆயிரத்து 33 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்றைய தினத்தை விட அதிகமாகும். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 83 இலட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் 511 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 23 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது