இந்தியாவில் மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

202006270951055479 In Madurai Corona Ward 5 more people died and 194 people SECVPF
202006270951055479 In Madurai Corona Ward 5 more people died and 194 people SECVPF

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த வாரங்களில் குறைவடைந்திருந்த நிலையில், தற்போது கனிசமாக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்று (04) தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 465 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 83 இலட்சத்து 63 ஆயிரத்து 412 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 704 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 24 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77 இலட்சத்தை கடந்துள்ளதுடன் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.