அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மூன்றாவது ஆட்சிக்காலமாக புதிய ஆட்சி அமையாது என ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் அமைப்பை முற்றிலும் மாற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக புதியதொரு சூழலை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஆகவே முழு நாட்டிற்கு பொருத்தமான புதிய ஆட்சி முறைமையை தமது ஆட்சிக் காலத்தில் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.