உலக அளவில் கொரோனா நோயால் மரணித்தோரின் எண்ணிக்கை 15 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதுவரையில் இந்த நோயினால் 6 கோடியே 49 லட்சத்து 33 ஆயிரத்து 345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 கோடியே 50 லட்சத்து 28 ஆயிரத்து 806 பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, அமெரிக்காவில் எதிர்வரும் நாட்களில் கொவிட் நோயாளர்களது எண்ணிக்கை மேலும் கடுமையான அதிகரிப்பை வெளிப்படுத்தும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தநாட்டின் வைத்தியசாலைகளில் வைத்து உயிரிழந்த கொவிட் 19 நோயர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.