மியான்மரை சேர்ந்த பௌத்த துறவியொருவர், கொடிய பாம்புகளை தனது பிள்ளைகளாக நினைத்து வளர்த்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
69 வயதான குறித்த துறவி வீடுகள் உள்ளிட்ட இடங்களில் பிடிபடும் பைத்தான், வைபர், கோப்ரா உள்ளிட்ட பாம்புகளை வாங்கி வந்து யாங்கூனிலுள்ள ஆசிரமத்தில் வளர்க்கிறார்.
பாம்புகள் கொல்லபடுவதை தடுப்பதற்காகவும், சீன பாரம்பரிய மருந்துக்காகவும் கள்ள சந்தையில் விற்க கடத்தபடுவதை தடுப்பதற்காகவும் இதுபோல செய்வதாக தெரிவிக்கும் அவர், பாம்புகளை கண்டு அஞ்சாமல் தோளில் மாலையாக போட்டு அமர்கிறார்.