தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படமும், மாநாடு திரைப்படமும் உருவாகி வருகிறது.
மேலும் இவர் கடந்த ஒக்டோபர் மாதத்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்தார். அதில் தனது படங்கள் குறித்த அறிவிப்புகள், புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
அந்தவகையில் தற்போது புதிய தோற்றத்தில் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு சொல்லப்படாத கதை என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
சிம்புவின் இப் புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஹொலிவூட் நடிகர்களுக்கே டொப் கொடுக்குறியே தலைவா எனப் பதிவிட்டு வருகின்றனர்.