சின்னத்திரையில் ஏராளமான நடிகர் நடிகைகள், பணப்பிரச்சனை, சீரியல் வாய்ப்பு இல்லாதது போன்ற காரணங்களாலும், காதல் போன்ற விவகாரங்கள் காரணமாகும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் சின்னத்திரையில் இதுவரை ஏராளமான நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் தற்போது அவர்கள் யார் யார் என பார்ப்போம்.
நடிகர் சாருகேஷ்
சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சாருகேஷ், பணப்பிரச்சினை காரணமாக, 2004ல் இரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
நடிகை வைஷ்ணவி
2006ல் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
முரளி மோகன்
வம்சம், தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முரளி மோகன் 2014ம் ஆண்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சீரியல் வாய்ப்புக்கள் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பாலாஜி யாதவ்
கடந்த வருடம் அரசி உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் டிவி சீரியல் இயக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.
ஷோபனா
சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்த ஷோபனா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் போனதால் மன இறுக்கத்திற்கு ஆளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.
நடிகை மயூரி
தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்துவந்த மயூரி 2005ஆம் ஆண்டு வாழ்க்கை மீது நம்பிக்கை இல்லாததால் சாவதாக எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிரதியுஷா
ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஹிந்தி டப்பிங் சீரியலான மண் வாசனை சீரியலில் நடித்தவர் பிரதியுஷா.
கடந்த ஏப்ரல் மாதம் மின் விசிறியில் துப்பட்டாவினால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சாய் பிரசாந்த்
பாரதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சாய் பிரசாந்த். ஏராளமான சீரியல்களிலும் நடித்து வந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்தாக சொல்லப்படுகிறது.
சபர்ணா
சொந்த பந்தம் டிவி சீரியல் நடிகை சபர்ணா கடந்த 2016ஆம் ஆண்டு நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
படிக்காதவன், காளை, பூஜை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாகவும் நடித்துள்ளார்.
சித்ரா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவருக்கு அண்மையில் ஹேமந்த் என்பவருடன் நிச்சயமான நிலையில் சென்னை அருகே நசரத் பேட்டையில் ஓட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்செய்தி சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது சக கலைஞர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.