நானும் ரஜினியும் இணையத் தயார் – கமல் அதிரடி அறிவிப்பு

1608033718131073
1608033718131073

மக்களுக்காக எந்தவிதமான ஈகோவையும் விட்டுக்கொடுத்து ரஜினியுடன் இணைந்து களம் இறங்க தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நேற்றைய திகம பிரசாரம் மேற்கொண்டுள்ள போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மெலும் தெரிவிக்கையில்” புதிதாக கட்சி தொடங்க வருபவர்கள் ஒரு காரணத்துக்காக வருகிறார்கள். நான் கட்சி தொடங்கிய காரணம் என்னவென்று கூறிவிட்டேன். கண்டிப்பாக ஒரு மாற்றம் வேண்டும். நடிகர் ரஜினியும் அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் அவர்களது கொள்கை என்னவென்று தெளிவாக கூறவில்லை. ஒற்றை வார்த்தையில் சொல்வதை முழு கொள்கையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

சொல்லட்டும் பிறகு நாங்கள் பேசுவோம். எங்களுக்குள் நட்பு என்பது ஒருவருக்கு ஒருவர் ஒரு தொலைபேசியில் தொடர்பு கொள்ளக் கூடியது. அதில் எங்களுக்குள் உதவி செய்ய முடிந்தால் உதவி செய்வோம். கொள்கபை் படியும் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுக் கொடுத்துவிட்டு நாங்கள் ஒத்துழைப்போம். இது ஏற்கனவே சொன்னதுதான் என தெரிவித்துள்ளார்.