இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

1538819879 rain havy 2
1538819879 rain havy 2

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற கால நிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.