கொரோனாவை யாரும் அலட்சியமாகக் கருத வேண்டாம் என நடிகர் சரத் குமார் கூறியுள்ளார்.
அண்மையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையல், ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “டிசம்பர் 8 அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான் 6 நாட்களுக்குப் பிறகு இன்று மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்புகிறேன்.
மருத்துவ நிர்வாகம் மற்றும் சிகிச்சையில் பங்கெடுத்த அனைவரது மிகப்பெரிய முயற்சியாலும், உதவியாலும்தான் எனது தேகநிலை சீராகியிருக்கிறது. மேலும் 2 வாரங்கள் நான் தனிமைப்படுத்துதலில் நான் இருக்க வேண்டும்.
கொரோனாவை அலட்சியமாகக் கருதாமல் அவசியம் இருந்தால் மட்டும் மக்கள் வெளியில் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.