விக்னேஷ் சிவன் இல்லாமல் உருவாகும் போடா போடி 2!

தமிழ் சினிமாவில் உறவைக்காத்த எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் சிம்பு. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். சமீபகாலமாக சிம்புவுக்கு எந்த வெற்றிப் படங்களும் கிடைக்கவில்லை, ஆனாலும் இவரது ரசிகர்கள் தொடர்ந்து சிம்புவின் மீது அபார நம்பிக்கை வைத்து வருகின்றனர்.

ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சிம்பு தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதாவது மாநாடு மற்றும் ஈஸ்வரன் இந்த இரண்டு படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளிவருகின்றன.

பொங்கலுக்கு ஈஸ்வரன் படம் திரைக்கு வரவுள்ள நிலையில் சிம்பு அடுத்த படத்துக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 2012ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தில் சிம்பு, வரலட்சுமி சரத்குமார், ஆகியோர் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

தற்போது போடா போடி -2 படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளதாக தயாரிப்பாளர் பதம் குமார் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் ரித்திகா பால் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் மேலும் ஒரு சஸ்பென்ஸ் என கூறியுள்ளார். அதாவது முதல் பாகத்தை எடுத்த விக்னேஷ் சிவன் இப்படத்தை எடுக்க வில்லை மற்றொரு இயக்குனர் எடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் யார் என்பதை அவர் இன்னும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.