சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா படம் வெளியாகும் திகதியை அப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி சாரதியாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் மிரட்டலான சுவரொட்டியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் அல்லு அர்ஜுன், வெளியாகம் திகதியையும் அறிவித்துள்ளார். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 13-ந் திகதி புஷ்பா படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.