சித்ராவின் கையில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய காயம்:இறுதியாக வெளியான புகைப்படத்தில் அம்பலமாகிய உண்மை!

chitra
chitra

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடைசியாக வெளியிட்ட காணொளியில் தற்போது ரசிகர்கள் மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தினை அவதானித்துள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் 9ம் திகதி பிரபல தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார் நடிகை சித்ரா. இவருடன் இவரது கணவர் ஹேம்நாத் இருந்துள்ளார்.

இவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சித்ராவின் அறைக்குச் சென்ற அவர் தாய் கதறியழுத சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.

தற்போது சித்ரா இறுதியாக வெளியிட்ட காணொளியில் அவரது கையில் காயம் இருப்பதை ரசிகர்கள் அவதானித்து, வெளியிட்டு தங்களது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.

சிகப்பு நிற ஆடையில் அட்டகாசமான அழகுடன் இருந்த அவரது கையில் மைக் பச்சைக் குத்தியிருந்தார். அதன் அருகில் அவரை அடித்து காயம் இருப்பது தற்போது வெளியாகியுள்ளது.