திருவிழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னணி நடிகை

1514895330 6049
1514895330 6049

தமிழ் சினிமாவில் பூ. சென்னையில் ஒருநாள், உத்தமவில்லன், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி திருவிழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா தொற்றுப் பரவியது. இதனால் கேரளாவில் பூரம் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால்

ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வரும் 23 ஆம் திகதி கேரளாவில் பூரம் திருவிழாவை கேரளாவில் கொண்டாட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

இதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் பூரம் திருவிழாவை தடை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் கும்பமேளாவில் கலந்துகொண்ட 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தகவலையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.