வனவாசல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!

1618969039 3342086 hirunews
1618969039 3342086 hirunews

களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (20) வனவாசல பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 35 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 35 வயதுடைய வனவாசல, களனி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் இன்று (21) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேலியகொட காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.