இயக்குனர் வசந்தபாலன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அறிவித்துள்ளார்.
இயக்குனர் வசந்தபாலன் வெயில், அங்காடித்தெரு மற்றும் காவியத்தலைவன் ஆகிய படங்களின் மூலம் முத்திரைப் பதித்தவர்.
இப்போது அவர் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்போது தனக்குக் கொரோனா உறுதியாகியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.