முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5லட்சம் வழங்கியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.
இந்நிலையில் நேற்றைய தினம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை நிவாரண நிதியாக அளித்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. அதேபோல் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனும் ரூபாய் ஒரு லட்சம் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5லட்சம் வழங்கினேன். மனம்விட்டு உரையாடினோம். முதலமைச்சர் பண்பாட்டில் பழுத்திருக்கிறார் நல்லாட்சி குறித்தே கனவு காண்கிறார் செயல் குறித்தே திட்டமிடுகிறார் நாடுகாக்கத் துடிக்கும் நல்லவரை வாழ்த்தினேன் என பதிவிட்டுள்ளார்.