நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் நிழல். இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரம்யா சுரேஷ் சமீபத்தில் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் இருப்பது நடிகை ரம்யா சுரேஷ் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து அறிந்த நடிகை ரம்யா சுரேஷ் சைபர் கிரைம் காவற்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில் இருப்பது தானில்லை என்றும் அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியது யார் என்பது குறித்து காவற்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.