இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (03) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 371 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 85 இலட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது.

இவர்களில் 2 கோடியே 65 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 16 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 2706 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.