மின் விநியோக தடையால் 44,000 பேர் பாதிப்பு

power cut
power cut

நாட்டில் அதிக மழை காரணமாக நாடு முழுவதும் 44,000 பேருக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றிரவு நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக, பல இடங்கள் நீர்ல் மூழ்கி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் மஹரகம, கடுவலை, ஜயவர்தனபுர உள்ளிட்ட பல இடங்களில் மழை காரணமாக நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா மாவட்டத்தில் களனி, கிரிபத்கொட, பேலியகொட உள்ளிட்ட பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தொடர்ச்சியான மழை காரணமாக மின்சார தடை ஏற்பட்டுள்ள அதேவேளை பெரும்பாலான பகுதிகளுக்கு நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.