அமெரிக்காவை சேர்ந்த நடிகை டகோடா ஸ்கை, ஆபாச படங்களில் நடித்து பிரபலமானார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், வீட்டில் மாரடைப்பு முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவற்துறையினர் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். டகோடா ஸ்கை மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர் என்று தெரியவந்துள்ளது.
அண்மையில் டகோடாவின் தாத்தாவும், பாட்டியும் கொரோனா பாதிப்பினால் இறந்துள்ளனர். அதன்பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நடிகை டகோடா ஸ்கை, காவற்துறையினறள் கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு ஓவியத்தின் முன்னால், கடந்த மே மாதம் ஆடையில்லாமல் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.