எரிபொருள் விலை அதிகரிப்பு ;மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

201806081825332202 dharna struggle demanding to solve the drinki 720x450 1

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாரவில – மோதரவெல்ல பகுதி வாழ் மீனவர்கள் இன்று (14) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

அரசாங்கத்தின் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளமையால் தமது தொழிலை சரிவர முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதாக இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இன்று (14) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அதிகரித்த எரிபொருள் விலைகளை திருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூடவுள்ளது.