பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச குறுந்தகவல்கள்அனுப்பிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.
அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பொஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். இந்நிலையில் இவரது வட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச குறுந்தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார்.
இந்நிலையில் ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை சைபர் பிரிவு காவற்துறையினர் கைது செய்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது ராய் ஜான்பாலிடம் காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.