பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் தயாரிப்பில் உருவாகிவரும் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது
இடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த ‘அந்தகன்’ படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
இன்றைய படப்பிடிப்பில் பிரசாந்த், மனோபாலா, சிம்ரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர் என்பதும் இந்த படப்பிடிப்பு இன்னும் இருபது நாட்கள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது